தமிழ்நாடு

நண்பரை வெட்டி கொன்ற சக நண்பர்கள் : மதுபோதையில் நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிழ்த்தான் பகுதியில், நண்பரை சக நண்பர்களே வீடு புகுந்து வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிழ்த்தான் பகுதியில், நண்பரை சக நண்பர்களே வீடு புகுந்து வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுந்தரமூர்த்தி, ஈஸ்வரன் ஆகியோர் நண்பர்களாக பழகிவந்த நிலையில், சமீப காலமாக குடிநீர் பிடிப்பதில் இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திய ஈஸ்வரன், தனது சக நண்பர்கள் இருவரை அழைத்துகொண்டு, சுந்தரமூர்த்தியின் வீடு புகுந்து அவரை வெட்டி கொலை செய்துள்ளார். தகவல் அறிந்த வண்ணியம்பட்டி போலீசார், ஈஸ்வரனை கைது செய்துள்ளனர். மற்ற இரு நண்பர்களை தேடி வருகின்றனர்.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்