வெடி விபத்து நிகழ்ந்த அறைகளுக்கு அருகே இருந்த மற்றொரு அறையில் இருந்த வெடி பொருட்கள் வெடித்துச் சிதறியதில், மீட்புப் பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த மீட்புக் குழுவினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் இருந்த நிலையில், அவர்கள் நூலிழையில் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...