ஜன. 5 அல்லது 6ல் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் - அமைச்சர் காந்தி
ஜனவரி மாதம் ஐந்து அல்லது ஆறாம் தேதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்று அமைச்சர் காந்தி தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், டிசம்பர் 15ம் தேதியே அனைத்து குடும்ப அட்டைதாரருக்கு தேவையான இலவச வேஷ்டி, சேலைகளை வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார்.