தமிழ்நாடு

இலவச ஆடு வழங்கும் திட்டம் : பயனாளிகள் பட்டியலை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி

இலவச ஆட்டுக்கான பயனாளிகள் பட்டியலை தாக்கல் செய்ய சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம், டி.அதிகரையை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,"கிராமப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக ஆடு வழங்கும் திட்டம் தமிழக அரசால் கடந்த 2011ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் 30 சதவீதம் பயனாளிகள் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று விதி உள்ள நிலையில் , கழுகர்கடை ஊராட்சியில் அதிமுகவினர் அரசு அதிகாரிகள் துணையுடன் பயனாளிகளை சேர்ப்பதாகவும் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, நடப்பாண்டு கழுகர்கடை ஊராட்சியில் இலவச ஆட்டுக்கான பயனாளிகள் பட்டியலை தாக்கல் செய்ய சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை