தமிழ்நாடு

இலவச சைக்கிளில் கர்நாடக அரசின் சின்னம் எப்படி வந்தது..? - உயர்நீதிமன்றம் கேள்வி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிளில் கர்நாடக அரசின் சின்னம் எப்படி வந்தது என, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டத்தில், இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சைக்கிளில் கர்நாடக அரசின் சின்னம் இடம் பெற்றிருந்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இலவச சைக்கிளில் கர்நாடக அரசு சின்னம் இடம் பெற்றது எப்படி எனவும், இதைக் கூட அதிகாரிகள் கவனிக்க மாட்டார்களா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, கூடுதல் மனுத்தாக்கல் செய்ய டிராபிக் ராமசாமிக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்