யுபிஎஸ்சி நேர்முகத்தேர்வுகளுக்கு செல்பவர்களுக்காக மனித நேயம் அறக்கட்டளை சார்பில் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி நேர்முகத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் நாளை முதல் இணையதளம் வாயிலாகவும், சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள பயிற்சி மையத்தில் நேரிலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சைதை துரைசாமி அவர்களால் நடத்தப்படும் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். அகாடமியில், கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி உள்ளிட்ட 93 பேர் நடப்பாண்டில் நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.