தமிழ்நாடு

அமைச்சர் பெயரை சொல்லி பல லட்சம் மோசடி.. சிக்கிய மகன் தந்தை.. சென்னையில் அடுத்த பரபரப்பு

தந்தி டிவி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் எனக் கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.

தாம்பரத்தைச் சேர்ந்த தாமோதரன் மற்றும் அவரது மகன் ஹரிஷ் ஆகியோர், வேலைவாங்கி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அமைச்சர் உதயநிதியின் கையெழுத்தை மோசடியாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அமைச்சரின் வாகனம் எனக் கூறி மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தாமோதரன் என்பவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருப்பதும் அவரது மகன் ஹரிஷ் கிறிஸ்தவ மத போதகராக இருப்பதும் தெரிய வந்துள்ளது. எத்தனை பேரை இதுபோன்று ஏமாற்றியுள்ளார்கள் என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்