தமிழ்நாடு

ரூ.31 லட்சம் மோசடி.. காஞ்சியை கலக்கிய சகோதரர்கள் | Kanchipuram | Brothers | Insurance

தந்தி டிவி

மதுரை மாவட்டம், வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். பட்டதாரியான இவர், பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில் பணியாற்றி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள வாகனங்களுக்கு காப்பீடு வழங்கி வந்தார். இந்நிலையில், இவரது சகோதரரான ராஜேஷ்குமார் என்பவர், விக்னேஷின் காப்பீடு முகவர் கடவு எண்ணை பயன்படுத்தி நான்கு சக்கர வாகனங்களுக்கு போலியாக காப்பீடுகள் வழங்கியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், போலியாக காப்பீடு சான்றிதழ் வழங்கி 31 லட்சத்து 46 ஆயிரத்து 10 ரூபாய் மோசடி செய்தது கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ