தமிழ்நாடு

மருத்துவமனை கட்டுவதில் மோசடி : பொதுப்பணித்துறை மருத்துவ பிரிவு அதிகாரிகள் மீது வழக்கு

மதுரையில் மருத்துவமனை கட்டுவதற்கு போலியான ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த‌ பொதுப்பணித்துறை மருத்துவ பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

மதுரையில் மருத்துவமனை கட்டுவதற்கு போலியான ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த‌ பொதுப்பணித்துறை மருத்துவ பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், உள்கட்டமைப்புக்காக PMSSY என்ற பெயரில் மத்திய அரசு சுமார் 2 கோடியே 24 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. அந்த பணத்தை, பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு கீழ் செயல்படும் மருத்துவ பிரிவை சேர்ந்த அதிகாரிகள் முறையாக டெண்டருக்கு விடாமல், தங்கள் உறவினர்களுக்கே ஒதுக்கீடு செய்துள்ளதாக புகார் எழுந்த‌து. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், போலியான ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இதனை தொடர்ந்து, மதியழகன், காசி பாண்டியன், செல்வராஜ், மீனாள் ஆகிய பொதுப்பணித்துறை மருத்துவ பிரிவை சேர்ந்த அதிகாரிகள் உள்பட, 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி