தேனி அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்த கலைராஜன் என்ற இளைஞர் உயர் படிப்பிற்காக பிரான்ஸ் சென்றிருந்த நிலையில், அங்கு மரியம் என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது. இருவரின் பெற்றோரது சமதத்துடன் கடந்த மே மாதம் பிரான்சில் உள்ள தேவாலயத்தில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது தேனி வீரபாண்டியில் வைத்து பாரம்பரிய தமிழ் முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.