தமிழ்நாடு

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

முன்னாள் சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான பி.எச். பாண்டியன் காலமானார்.

தந்தி டிவி

உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பி.எச்.பாண்டியன், இன்று உயிரிழந்தார். நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி பகுதியை சேர்ந்த பி.எச்.பாண்டியன், நெல்லை எம்.பியாகவும், அதிமுக அமைப்பு செயலாளராகவும் பணியாற்றி உள்ளார். சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்று பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தவர் பி.எச்.பாண்டியன்.எம்.ஏ. குற்றவியல் மற்றும் சட்ட விஞ்ஞான படிப்பும், எம்.எல். கிரிமினல் சட்ட படிப்பும் முடித்திருத்த பி.எச்.பாண்டியன், வழக்கறிஞராக திறம்பட பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு அதிமுக மற்றும் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை