தமிழ்நாடு

துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் : சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

துபாய்க்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை, சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
துபாய்க்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை, சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கொழும்புவில் இருந்து துபாய் நோக்கி சென்ற விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த முகமது ஷபீர் என்பவரின் உடமைகளை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, ஒரு சூட்கேசில் இருந்த துணிக்குள் கட்டுக் கட்டாக யூரோ கரன்சிகள், குவைத் தினார், துபாய் திர்ஹம்ஸ் ஆகியவை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் முகமது ஷபீரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி