தமிழ்நாடு

துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் : சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

துபாய்க்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை, சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
துபாய்க்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை, சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கொழும்புவில் இருந்து துபாய் நோக்கி சென்ற விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த முகமது ஷபீர் என்பவரின் உடமைகளை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, ஒரு சூட்கேசில் இருந்த துணிக்குள் கட்டுக் கட்டாக யூரோ கரன்சிகள், குவைத் தினார், துபாய் திர்ஹம்ஸ் ஆகியவை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் முகமது ஷபீரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு