கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கடலூர் நகர் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
தங்கராஜ் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதேபோல் துரைசாமி நகர், பாரதி நகர், வில்வ நகர், ராமலிங்க நகர், அழகப்ப நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.