தமிழ்நாடு

தயாராக இருக்கும் மிதவை உணவக கப்பல்.. தமிழ்நாட்டில் முதல் முறையாக.. பிரம்மாண்டமாய்.. "முதல்வர் தேதிக்காக காத்திருக்கிறோம்"

தந்தி டிவி

சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு படகு குழாமில், தமிழ்நாட்டில் முதல்முறையாக, மிதக்கும் உணவக கப்பலின் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தவுடன் விரைவில் சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பதற்கான தேதிக்காக காத்திருப்பபதாகவும் எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார். கோடை விடுமுறையிலேயே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்