தமிழ்நாடு

தயாராக இருக்கும் மிதவை உணவக கப்பல்.. தமிழ்நாட்டில் முதல் முறையாக.. பிரம்மாண்டமாய்.. "முதல்வர் தேதிக்காக காத்திருக்கிறோம்"

தந்தி டிவி

சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு படகு குழாமில், தமிழ்நாட்டில் முதல்முறையாக, மிதக்கும் உணவக கப்பலின் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தவுடன் விரைவில் சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பதற்கான தேதிக்காக காத்திருப்பபதாகவும் எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார். கோடை விடுமுறையிலேயே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?