தமிழ்நாடு

தயாராக இருக்கும் மிதவை உணவக கப்பல்.. தமிழ்நாட்டில் முதல் முறையாக.. பிரம்மாண்டமாய்.. "முதல்வர் தேதிக்காக காத்திருக்கிறோம்"

தந்தி டிவி

சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு படகு குழாமில், தமிழ்நாட்டில் முதல்முறையாக, மிதக்கும் உணவக கப்பலின் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தவுடன் விரைவில் சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பதற்கான தேதிக்காக காத்திருப்பபதாகவும் எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார். கோடை விடுமுறையிலேயே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்