தமிழ்நாடு

திருச்சியில் 3 மணி நேரம் நின்ற விமானம் - கொந்தளித்த 160 பயணிகள்

தந்தி டிவி

திருச்சியில் இருந்து பெங்களூர் வழியாக மும்பைக்கு இண்டிகோ விமானம் இன்று காலை 8.05 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. இதில் 160 பயணிகள் காலை 7.30 மணி அளவில் இண்டிகோ விமானத்தில் அமர்ந்திருந்தனர். விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக 3 மணி நேரத்திற்கு மேலாக விமானம் புறப்படாமல் இருந்ததால் பயணிகள் கூச்சலிட்டு அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

மேலும் திருச்சியில் இருந்து மும்பை வழியே மற்ற நாடுகளுக்கு செல்ல இருந்த பயணிகள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி உற்றனர். இதனை தொடர்ந்து

மும்பை செல்லும் பயணிகள் திருச்சியில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து மும்பை செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’