தமிழ்நாடு

சுருக்கு வலைகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்

சுருக்கு வலைகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.

தந்தி டிவி
கடலூர் அருகே சுருக்கு வலைகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் 15-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், கடலூர் முதுநகர் சோதனை சாவடி அருகே லாரி ஒன்றை மடக்கி போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சுருக்கு வலை மற்றும் லாரியயை பறிமுதல் செய்தனர். இதேபோல் 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை கண்டித்து கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் காலவரையற்ற போராட்டத்தை மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்