#perumal #purattasisani #thanthitv
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோபூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் சத்தியநாராயணா அலங்காரம் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.