Rajasthan | தீடீரென மளமளவென பற்றி எரிந்த தீ - காரோடு கருகிய 5 பேர் #rajasthan #fireaccident #thanthitv ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் அருகே டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில், காரில் இருந்த 5 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். வைஷ்ணோ தேவி புனித யாத்திரையை முடித்துவிட்டு, டெல்லியிலிருந்து கோட்டா நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓடிக்கொண்டிருந்த கார் சில நிமிடங்களிலேயே முழுமையாகத் தீப்பிழம்பாக மாறியதால், உள்ளே இருந்தவர்கள் தப்பிக்க முடியாமல் காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.... இச்சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், காரின் ஓட்டுநர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.