மின் கசிவு பரவிய தீ - 2வது மாடியில் இருந்து குதித்தவர் படுகாயம்
சென்னை பெரவள்ளூரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. எஸ்ஆர்பி கோயில் தெற்கு தெருவில் ஹரி கோவிந்த் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தில்
கட்டிடத்தின் கீழ் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் முதல் இரண்டு தளங்களுக்கு வேகமாக தீ பரவியது.