தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 2 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
காக்கிவாடன்பட்டியில் உள்ள ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்து கலக்கும் பணியின் போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. சக்தி வாய்ந்த பட்டாசுகள் வெடித்ததில், அறையில் இருந்த விளாம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர். மம்சாபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி, துரைசாமிபுரத்தை சேர்ந்த பாண்டியராஜன் ஆகிய இருவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்தில் அந்த அறை முழுவதும் இடிந்து சேதமானது. விபத்து குறித்து சிவகாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக