தமிழ்நாடு

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து - ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் சேதமாகின.

தந்தி டிவி
வள்ளிமில் பகுதியில் வெற்றிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக மூடி கிடந்துள்ளது. இந்நிலையில் கடையில் ஏற்பட்ட மின்கசிவால் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதற ஆரம்பித்தன. தகவல் அறிந்து அங்கு வந்த 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினரின் துரித முயற்சியால் தீ அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கிற்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை