தமிழ்நாடு

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து - ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் சேதமாகின.

தந்தி டிவி
வள்ளிமில் பகுதியில் வெற்றிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக மூடி கிடந்துள்ளது. இந்நிலையில் கடையில் ஏற்பட்ட மின்கசிவால் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதற ஆரம்பித்தன. தகவல் அறிந்து அங்கு வந்த 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினரின் துரித முயற்சியால் தீ அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கிற்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்