தமிழ்நாடு

சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு - திடீர் வெடிவிபத்தால் 3 வீடுகள் தரைமட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 வீடுகள் தரைமட்டமானது.

தந்தி டிவி
சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி பகுதியில் வசிக்கும் முனியசாமி என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். நேற்று மாலை பட்டாசு தயாரித்தபோது, உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த குடியிருப்புகளுக்கும் தீ பரவியது. இதில் அந்த பகுதியில் உள்ள 3 வீடுகள் தரைமட்டமானது. தகவலறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அனைத்தனர். இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுமிகள் உட்பட 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு