தமிழ்நாடு

காங். கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு - அனுமதியின்றி பேரணி நடத்தியதாக புகார்

சென்னை வண்ணாரப்பேட்டையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னை வண்ணாரப்பேட்டையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தொடங்கி 134 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்று கூட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார். இந்நிலையில், அனுமதி பெறாமல் தடையை மீறி பேரணியாக சென்று, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக காங்கிரஸ் வடசென்னை மாவட்ட தலைவர் மற்றும் 50 வட்ட தலைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்