தமிழ்நாடு

ஸ்ரீவைகுண்டம்: டிஎஸ்பிக்கு எதிராக ஆய்வாளர் போர்க்கொடி

ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி பகை உணர்வுடன், தகாத வார்த்தைகளால் திட்டுவதாக காவல் ஆய்வாளர் ஒருவர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
செய்துங்கநல்லூர் காவல்நிலையத்திற்கு சென்ற ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சுரேஷ்குமார், ஆய்வாளர் ரகுராஜன் பணியில் இல்லை என அலுவலக குறிப்பேட்டில் எழுதியுள்ளார். மேலும், வாக்கி டாக்கியில் ஆய்வாளர் ரகுராஜனை அழைத்து, கடுமையான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆய்வாளர் ரகுராஜன் அலுவலக பொது குறிப்பேட்டில், டி.எ​ஸ்.பி சுரேஷ்குமார், தனது மாமியாரின் நெருங்கிய சித்தப்பா மகன் என்றும் குடும்ப பகை காரணமாக, தனிப்பட்ட முறையில் தம்மை தகாத வார்த்தையால் திட்டி அவமானப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற செல்வதாக பொதுகுறிப்பேட்டில் அவர் எழுதி வைத்துள்ளார். டி.எஸ்.பி சுரேஷ்குமார், ஆய்வாளர் ரகுராஜன் இடையிலான இந்த மோதல், காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை