தமிழ்நாடு

ஸ்ரீவைகுண்டம்: டிஎஸ்பிக்கு எதிராக ஆய்வாளர் போர்க்கொடி

ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி பகை உணர்வுடன், தகாத வார்த்தைகளால் திட்டுவதாக காவல் ஆய்வாளர் ஒருவர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
செய்துங்கநல்லூர் காவல்நிலையத்திற்கு சென்ற ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சுரேஷ்குமார், ஆய்வாளர் ரகுராஜன் பணியில் இல்லை என அலுவலக குறிப்பேட்டில் எழுதியுள்ளார். மேலும், வாக்கி டாக்கியில் ஆய்வாளர் ரகுராஜனை அழைத்து, கடுமையான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆய்வாளர் ரகுராஜன் அலுவலக பொது குறிப்பேட்டில், டி.எ​ஸ்.பி சுரேஷ்குமார், தனது மாமியாரின் நெருங்கிய சித்தப்பா மகன் என்றும் குடும்ப பகை காரணமாக, தனிப்பட்ட முறையில் தம்மை தகாத வார்த்தையால் திட்டி அவமானப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற செல்வதாக பொதுகுறிப்பேட்டில் அவர் எழுதி வைத்துள்ளார். டி.எஸ்.பி சுரேஷ்குமார், ஆய்வாளர் ரகுராஜன் இடையிலான இந்த மோதல், காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்