தமிழ்நாடு

மலை கிராமங்களில் கொரோனா அச்சம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக மலை கிராமத்தின் சுற்று பாதைகளை மூங்கில் மரங்களை கொண்டு பழங்குடி பெண்கள் அடைத்துள்ளனர்.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக மலை கிராமத்தின் சுற்று பாதைகளை மூங்கில் மரங்களை கொண்டு பழங்குடி பெண்கள் அடைத்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள கோடமூலா கிராமத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் தங்களை தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். அதன்படி தங்கள் கிராமத்திற்கு வரும் அனைத்து சாலைகளிலும் மூங்கில் மரங்களை கொண்டு தடுப்பு வேலி அமைத்துள்ளனர். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை கூட கிராமத்திற்குள் அனுமதிப்பது இல்லை. மேலும், அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படும் கிராம மக்கள் அவர்களாகவே சாலை பகுதிக்கு வந்து பொருட்களை வாங்கி செல்லவேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

Union Budget 2026 | ``5 மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் ஸ்பெஷல் கவனிப்பு?’’

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Budget 2026 Tamil | ரூ.15 லட்சமாக.. பரபரப்பை எகிறவிடும் மத்திய பட்ஜெட்

🔴LIVE : Union Budget 2026 | மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன் வருகை

Union Budget 2026 | பல சர்ப்ரைஸோடு தாக்கல் செய்யப்படும் 2026 பட்ஜெட்?