ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை கோரி, சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்வாழ் மலையாளிகள் சங்கத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மாணவி பாத்திமா லத்தீப் இறப்பதற்கு முன்பு, அவர் தொலைபேசியில் பதிவுசெய்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பேராசிரியரை கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.