தமிழ்நாடு

மகளின் வீட்டில் தங்கிய மருமகன்... கட்டையால் அடித்துக் கொன்ற மாமனார்.! விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே, மருமகனை கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிய மாமனாரை போலீசார் தேடி வருகின்றனர்.

இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்ற இளைஞருக்கு, மாசாணம் என்ற பெண்ணுடன் திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளன. மனைவி மாசாணத்தின் தந்தை முத்துக்குட்டி என்பவர், கடந்த 6 மாதங்களாக மகளின் வீட்டிலேயே தங்கி வந்துள்ளார். இதனால், மருமகனுக்கும், மாமனாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த முத்துக்குட்டி, மருமகன் என்றும் பாராமல் நாகராஜை, கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய முத்துக்குட்டியை தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்