தமிழ்நாடு

மகளின் வீட்டில் தங்கிய மருமகன்... கட்டையால் அடித்துக் கொன்ற மாமனார்.! விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே, மருமகனை கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிய மாமனாரை போலீசார் தேடி வருகின்றனர்.

இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்ற இளைஞருக்கு, மாசாணம் என்ற பெண்ணுடன் திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளன. மனைவி மாசாணத்தின் தந்தை முத்துக்குட்டி என்பவர், கடந்த 6 மாதங்களாக மகளின் வீட்டிலேயே தங்கி வந்துள்ளார். இதனால், மருமகனுக்கும், மாமனாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த முத்துக்குட்டி, மருமகன் என்றும் பாராமல் நாகராஜை, கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய முத்துக்குட்டியை தேடி வருகின்றனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்