தமிழ்நாடு

"பாஸ்ட்டேக் திட்டத்தை செயல்படுத்துவதில் மும்முரம்" - போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார்

மத்திய அரசு அறிவித்த காலகெடுவிற்கு முன்பே சுங்கசாவடிகளில் பாஸ்ட்டேக் திட்டத்தை அமல்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் செலுத்த வசதியாக பாஸ்ட் டேக் திட்டம் நாடு முழுவதும் கடந்த 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவித்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் சுங்கச்சாவடியில் தலா 7 கவுண்டர்கள் உள்ள நிலையில், 4 கவுன்ட்டர்கள் பாஸ்ட்டேக் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 3 கவுண்டர்கள் வழியாக மட்டுமே பணம் கொடுத்து செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஜனவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ள நிலையில், முறையாக பராமரிக்கப்படாத இந்த சாலையில், அடியாட்கள் உதவியுடன் கட்டண வசூல் நடைபெறுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு