தமிழ்நாடு

2,000 ஏக்கரில் நடைபெறும் விவசாயம் - 10 ஏக்கருக்கு கூட பயன்படாத பாசன நீர் - விவசாயிகள் வைத்த கோரிக்கை

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பாசனத்திற்கு போதிய அளவு நீரை என்.எல்.சி நிர்வாகம் வெளியேற்றாததால் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர்.

மதுவானைமேடு கிராமப் பகுதியில் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. என்.எல்.சி. இரண்டாவது சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது, இந்த பாசனத்திற்கு வழங்கப்படுவது, வழக்கம். தற்போது வெளியேற்றப்படும் நீரானது, 10 ஏக்கர் நிலத்திற்கு கூட பயன்படாது என கூறி, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நீரை அதிகப்படுத்தி தர வேண்டும் என்றும், கிராமத்தின் பெரிய ஏரியை தூர்வாரி தர வேண்டும் என்றும், கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி