தமிழ்நாடு

2,000 ஏக்கரில் நடைபெறும் விவசாயம் - 10 ஏக்கருக்கு கூட பயன்படாத பாசன நீர் - விவசாயிகள் வைத்த கோரிக்கை

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பாசனத்திற்கு போதிய அளவு நீரை என்.எல்.சி நிர்வாகம் வெளியேற்றாததால் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர்.

மதுவானைமேடு கிராமப் பகுதியில் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. என்.எல்.சி. இரண்டாவது சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது, இந்த பாசனத்திற்கு வழங்கப்படுவது, வழக்கம். தற்போது வெளியேற்றப்படும் நீரானது, 10 ஏக்கர் நிலத்திற்கு கூட பயன்படாது என கூறி, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நீரை அதிகப்படுத்தி தர வேண்டும் என்றும், கிராமத்தின் பெரிய ஏரியை தூர்வாரி தர வேண்டும் என்றும், கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்