தமிழ்நாடு

மதகு உடைப்பு - நீரை சேமிக்க முடியாததால் விவசாய பாதிப்பு

பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள ஆண்டி குளத்தில் மதகு சேதமடைந்துள்ளதால், மழை நீரை 50 நாட்கள் கூட தேக்கி வைக்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை.

தந்தி டிவி
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள ஆண்டி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பாலும், மதகு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யாமல் இருப்பதாலும் 50 நாட்கள் கூட நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து கூறியுள்ள மக்கள் 250க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் இந்த குளத்தை நம்பியுள்ள நிலையில் குளத்தின் மூன்றில் 2 பகுதி நிலப்பரப்பு ஆக்கிரமிப்பில் உள்ளதால், மழை நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மதகு சேதமடைந்துள்ளதால், மழை நீரை 50 நாட்கள் கூட தேக்கி வைக்க முடியவில்லை என்றும், விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர். எனவே, விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மதகுகளை சீர் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்