தமிழ்நாடு

``ஆய்வுக்களமாக தமிழக டெல்டாவை பயன்படுத்தலாம்’’ மத்திய அரசுக்கு விவசாய சங்கம் கடும் எதிர்ப்பு

தந்தி டிவி

தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட பி.ஆர். பாண்டியன், மரபணு திருத்தப்பட்ட விதைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மரபணு திருத்தப்பட்ட விதைக்கு தடை உள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மரபணு திருத்தப்பட்ட விதைகளின் ஆய்வுக்களமாக காவிரி டெல்டா மாவட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக கூறிய அவர், இதுகுறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு வேளாண் குழுவை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்