தமிழ்நாடு

பண்ணை குட்டை அமைத்து தண்ணீர் தானம் செய்யும் கமுதி விவசாயி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால், பலரும் தங்களிடம் உள்ள ஆடு - மாடுகளை விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால், பலரும் தங்களிடம் உள்ள ஆடு - மாடுகளை விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேலச்சிறுபோது கிராமத்தை சேர்ந்த விவசாயி முகமதுரபி, பறவைகள் மற்றும் விலங்குகளுக்காகவே பண்ணைக்குட்டை அமைத்து தண்ணீர் தானம் செய்து வருகிறார். கமுதி சுற்றுவட்டார பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் ஆடு, மாடுகளின் தண்ணீர் தேவையை இந்த பண்ணைக்குட்டை பூர்த்தி செய்து வருகிறது. தினமும் அந்த குட்டையில், 5 ஆயிரம் ஆடு, மாடுகள் நீர் அருந்தி செல்கின்றன என்று முகமதுரபி தெரிவித்தார். இதே போல், காட்டுப்புறா, மைனா, காகம், மயில் உள்ளிட்ட பறவைகளும் அந்த பண்ணைக்குட்டை மூலம் தாகத்தை தீர்த்து கொள்கின்றன.சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தமது பண்ணை குட்டையை பயன்படுத்தி வருவது, மனநிறைவை தருவதாக விவசாயி முகமதுரபி தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"