தமிழ்நாடு

பண்ணை குட்டை அமைத்து தண்ணீர் தானம் செய்யும் கமுதி விவசாயி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால், பலரும் தங்களிடம் உள்ள ஆடு - மாடுகளை விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால், பலரும் தங்களிடம் உள்ள ஆடு - மாடுகளை விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேலச்சிறுபோது கிராமத்தை சேர்ந்த விவசாயி முகமதுரபி, பறவைகள் மற்றும் விலங்குகளுக்காகவே பண்ணைக்குட்டை அமைத்து தண்ணீர் தானம் செய்து வருகிறார். கமுதி சுற்றுவட்டார பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் ஆடு, மாடுகளின் தண்ணீர் தேவையை இந்த பண்ணைக்குட்டை பூர்த்தி செய்து வருகிறது. தினமும் அந்த குட்டையில், 5 ஆயிரம் ஆடு, மாடுகள் நீர் அருந்தி செல்கின்றன என்று முகமதுரபி தெரிவித்தார். இதே போல், காட்டுப்புறா, மைனா, காகம், மயில் உள்ளிட்ட பறவைகளும் அந்த பண்ணைக்குட்டை மூலம் தாகத்தை தீர்த்து கொள்கின்றன.சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தமது பண்ணை குட்டையை பயன்படுத்தி வருவது, மனநிறைவை தருவதாக விவசாயி முகமதுரபி தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்