தமிழ்நாடு

நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயற்சி

நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மானூர் அருகே ரஸ்தா பகுதியைச் சேர்ந்த விவசாயி போதர் என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் மற்றொருவர் அத்துமீறி வீடு கட்டுவதாக கூறி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நடக்கும் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ குளிக்க முயற்சித்தார். உடனே, போலீசாரும் பொதுமக்களும் அவரை மீட்டனர். தீயணைப்பு வாகனத்தில் இருந்து அவர் மீது தண்ணீர் அடிக்கப்பட்டது. பின்னர், அவரை பாளை காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை