தமிழ்நாடு

தனியார் தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விவசாயி...

தனியார் தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விவாசாயி , பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டதாக கூறி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை சக விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

தந்தி டிவி

தனியார் தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விவாசாயி , பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டதாக கூறி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை சக விவசாயிகள் முற்றுகையிட்டனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகேயுள்ள கொத்தூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராமலு என்ற விவசாயி, தங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலை, அரசு விதிகளை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டி, மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதன்மீது நடவடிக்கை எடுக்காத‌ நிலையில், ஸ்ரீ ராமலு பசுமை

தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், ஸ்ரீ ராமலு திடீரென கைது செய்யப்பட்டார். அவர் மீது பொய் வழக்கு போட்டு கைது

செய்துள்ளதாக கூறி விவசாயிகள் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருக்கும்

விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி