தமிழ்நாடு

கரும்பு விவசாயம் பாதிப்பு - மனவேதனையில் விஷம் குடித்த விவசாயி...

கரும்பு தோட்டம் அழிந்து போனதால் அவர் வேதனையில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
தஞ்சாவூரை அடுத்த தோழகிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவர், தனது நிலத்தில் கரும்பு , தென்னை, வாழை சாகுபடி செய்திருந்தார். கஜா புயலால் அனைத்தும் சேதமடைந்ததால், அவர் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் கரும்பு கொல்லையில் விஷம் குடித்து, மயங்கிய நிலையில், கிடந்துள்ளார். தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சாமிக்கண்ணுவை கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கரும்பு தோட்டம் அழிந்து போனதால் அவர் வேதனையில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்