தமிழ்நாடு

மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற விவசாயி

தந்தி டிவி

மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற விவசாயி

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கெங்கபுரம் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக அப்பகுதி சேர்ந்தவர்கள் சிலர் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்

இதன் அடிப்படையில் வட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் இன்று நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தையில் உடண்பாடு ஏற்படாத நிலையில் தன்னுடைய நிலத்தை 23 பேர் அபகரிக்க முயல்வதாக தற்கொலை கடிதத்தை பரணி தலமையிடத்து வட்டாட்சியர் அவர்களிடம் கொடுத்துவிட்டு கையில் இருந்த பெட்ரோல் ஊற்றி தனது உடலில் தீ வைத்துக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

தீ காயங்களுடன் மோகன்ராஜ் மீட்ட வளர்த்தி போலீசார் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி பெட்ரோல் ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை