தமிழ்நாடு

மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன்...

மதுரை அருகே குடும்ப தகராறு காரணமாக மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியை சேர்ந்த முத்துகுமார் என்பவர் கவிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததோடு, விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் கவிதாவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்ட முத்துகுமார், தனது மாமியார் லெட்சுமியின் காதை கடித்து துப்பியதாக கூறப்படுகிறது. அலறி துடித்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக முத்துக்குமாரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"