தமிழ்நாடு

போலீஸ் என கூறி மக்களை ஏமாற்றி இளைஞர் கைது

வாக்கி டாக்கியுடன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என கூறி மக்களை ஏமாற்றி, லட்சக்கணக்கான ரூபாய் வசூல் செய்த சென்னை இளைஞர் அரியலூரில் சிக்கியுள்ளார்.

தந்தி டிவி

சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் சசிகுமார். இவர் பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் காவலர்களின் நண்பனாக இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் சென்ற ச‌சிக்குமார், தான் ஒரு குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் என்றும் குற்றவாளி ஒருவரை பிடிக்க வந்துள்ளதாகவும் அறிமுகம் செய்துகொண்டு அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். போலீஸ் சீருடை, வாக்கி டாக்கியுடன் வந்த‌தால், விடுதி ஊழியர்களுக்கும் அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை.

இந்நிலையில், தன் அண்ணன் சுங்க வரி துறை அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறிய ச‌சிக்குமார், அண்ணன் மூலம் குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி தருவதாக கூறி, அங்குள்ள மக்களிடம் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் வசூல் செய்துள்ளார். இந்த நிலையில், அவர் மீது சந்தேகம் அடைந்த சிலர் கீழப்பழுவூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க போலீசார், ச‌சிக்குமாரை கைது செய்து சீருடை, தொப்பி, வாக்கி டாக்கி கருவிகளை பறிமுதல் செய்தனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு