தமிழ்நாடு

துணை முதல்வர் பெயரை பயன்படுத்தி மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி

துணை முதலமைச்சர் பெயரை பயன்படுத்தி, தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக 16 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
திருவண்ணாமலையை பொறியியல் பட்டதாரி சரவணன். இவரிடம், செந்தில் ராஜ் என்பவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளர் பணி வாங்கி தருவதாக கூறி, 16 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இது குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சரவணன், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் பெயரை பயன்படுத்தி செந்தில்ராஜ் ஏமாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். தன்னை போன்று பல பொறியியல் பட்டதாரிகளைகளையும் செந்தில்ராஜ் குறி வைத்துள்ளார் எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். செந்தில் ராஜ் அம்மா இருசக்கர வாகன திட்டம் மூலமும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு