தமிழ்நாடு

போலி நகை வைத்து ரூ.1 கோடி கடன் : நகை மதிப்பீட்டாளர் மீது சிபிஐ வழக்கு

தேனி கனரா வங்கியில் நகை கடன் அடமான விவகாரத்தில் 1 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

தந்தி டிவி

தேனி கனரா வங்கியில் நகை கடன் அடமான விவகாரத்தில் 1 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது. நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்த செந்தில் என்பவர், போலி நகைகளை போலி நபர்களை வைத்து ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இதை அறிந்த வங்கி மேலாளர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். இந்த வழக்கில், சிபிஐ விசாரிக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து, நகை மதிப்பீட்டாளர் செந்தில் மற்றும் உடந்தையாக இருந்த வினோத் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி