தமிழ்நாடு

போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடி : 7 பேர் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை

சேலத்தில் போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சேலத்தில் போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அழகாபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தனிப்படை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கி இருந்த 7 பேர் கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலி அடையாள அட்டைகள் மூலம் துணிக்கடை , வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகளில் தவணை முறையில் பொருட்களைப் கடனாகப் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், ஆதார் அட்டைகள், பான் கார்டுகள் சொகுசு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ