தமிழ்நாடு

போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடி : 7 பேர் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை

சேலத்தில் போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சேலத்தில் போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அழகாபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தனிப்படை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கி இருந்த 7 பேர் கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலி அடையாள அட்டைகள் மூலம் துணிக்கடை , வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகளில் தவணை முறையில் பொருட்களைப் கடனாகப் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், ஆதார் அட்டைகள், பான் கார்டுகள் சொகுசு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்