தமிழ்நாடு

ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பெயரில் மோசடி - மாணவர்களை தாக்கி செல்போன், நகை பறிப்பு

சென்னை வளசரவாக்கத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்று கூறி கல்லூரி மாணவர்களிடம் செல்போன், நகைகளை பறித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
சென்னை, வளசரவாக்கத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்று கூறி கல்லூரி மாணவர்களிடம் செல்போன், நகைகளை பறித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அனீஸ் ராஜ், வளசரவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார். கல்லூரிக்கு அருகே, ஒரு அடுக்குமாடி அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கியுள்ள நிலையில், நேற்றிரவு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. தங்களை ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்று கூறிய அந்த கும்பல், மாணவர்களை தாக்கி விலை உயர்ந்த 8 செல்போன்கள், பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் அடிப்படையில், ராயலா நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு