மனைவியுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த நண்பன் கொலை புதுச்சேரியில் தனது மனைவியுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த நண்பனை கணவன் கடப்பாரையால் அடித்து கொலை செய்தார் மணப்பட்டு கிராமத்தை சேர்ந்த வசந்தராஜா மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படும் நிலையில், வசந்தராஜாவின் மனைவிக்கும் அவரது நண்பர் மணிகண்டனுக்கும் இடையே திருமணம் தாண்டிய உறவு இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் மணிகண்டனை வசந்தராஜா கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வசந்தராஜாவை கைது செய்து கிருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்