தமிழ்நாடு

NLC விரிவாக்கம் - குவிந்த போலீஸ் - அதிகரித்த பரபரப்பு

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரிவெட்டி கிராமத்தில், பெரும்பாலான விளை நிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்திள்ளது. இந்நிலையில், அங்கு உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளை கையகப்படுத்தும் பணியில் என்எல்சி நிறுவனம் துவங்கியுள்ளது. இதற்காக, காவல்துறை பாதுகாப்புடன் சென்ற நில எடுப்புத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர், பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வீடுகளை அளவீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்து, தங்களது வீடுகளை அளவீடு செய்யக்கூடாது என அதிகாரிகளிடம் கூறினர். இதையடுத்து, எதிர்ப்பு தெரிவித்தோரின் வீடுகளை மட்டும் விட்டுவிட்டு, எதிர்ப்பு தெரிவிக்காத வீடுகளை மட்டும் அளவீடு செய்தனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு