தமிழ்நாடு

"சாதி உணர்வால் கற்றவர் தகுதியை அடைய முடியாது" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேதனை..

தந்தி டிவி

மாணவர்களிடையே சாதி உணர்வும், சாதிப் பகையும் வளர்ந்து வருவது வேதனையும் அவமானமும் அளிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தந்தை பெரியாரும், காமராஜரும், அண்ணாவும் வாழ்ந்த தமிழ்நாட்டில் இந்த நிலையா? என தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளில் எந்தப் பண்புகளைக் கற்பிக்கிறார்கள் என்ற கேள்வி எழுவதாகவும், சாதி உணர்வு, சாதிப் பகையை கொண்டுள்ள மாணவர் "கற்றவர்" என்ற தகுதியை அடைய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். சக மாணவரை "பிற" சாதி என்று பகை காட்டும் மாணவர்கள் இருக்கும்போது, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பெருமைப்படுவது கேலிக்கூத்து என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு