தமிழ்நாடு

Organ Donation | ``தந்தை மறைந்தாலும் பிறர் மூலம் வாழ வேண்டும்’’ - பிள்ளைகள் முடிவு

``தந்தை மறைந்தாலும் பிறர் மூலம் வாழ வேண்டும்’’ - பிள்ளைகள் முடிவு

thanthitv

``தந்தை மறைந்தாலும் பிறர் மூலம் வாழ வேண்டும்’’ - பிள்ளைகள் முடிவு.. நேரில் வந்து உடலுக்கு சல்யூட் அடித்த அரசு #organdonation #organtransplantation தந்தை மறைந்தாலும் பிறர் மூலம் வாழ வேண்டும் என முடிவெடுத்த பிள்ளைகள் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ரவிச்சந்திரன் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. தந்தை மறைந்தாலும் அவர் பிறர் மூலம் வாழ வேண்டும் என்ற உன்னத நோக்கில், அவரது பிள்ளைகள் மற்றும் மனைவி எடுத்த முடிவைத் தொடர்ந்து, ரவிச்சந்திரனின் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்டுப் பலருக்குப் பொருத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கொடிவேரி மயானத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது, அவரது உடலுக்கு அரசு சார்பில் வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். உயிரிழந்த நிலையிலும் சமூக அக்கறையுடன் செயல்பட்ட அக்குடும்பத்தினரை மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்