எரும சாணி விஜய் குமார் மீதான குற்றச்சாட்டுக்கு அவர் மனைவி நக்ஷத்ரா விளக்கம் 'எரும சாணி' புகழ் விஜய் குமார் குறித்து மலையாள நடிகை அனுராகா எஸ்.நம்பியார் முன்வைத்த புகாருக்கு, விஜய் குமாரின் மனைவி நக்ஷத்ரா விளக்கம் அளித்துள்ளார்... முன்னதாக 'ரெசார்ட்' என்ற இணையத் தொடரில் நடிக்கத் தன்னுடன் ஓராண்டு ஒப்பந்தம் செய்துவிட்டு, படப்பிடிப்பு நடத்தாமலும் சம்பளம் வழங்காமலும் வஞ்சித்ததாக அனுராகா வீடியோ வெளியிட்டிருந்தார்.... இதற்கு விளக்கம் அளித்துள்ள விஜயகுமாரின் மனைவி நக்ஷத்ரா, தாங்கள் அந்தத் தொடரின் தயாரிப்பாளர்கள் கிடையாது என்றும், பணத்திற்காகத் தயாரிப்பாளரிடம் தான் பேசியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.... அக்ரீமெண்ட்டை படித்துப் பார்த்துத்தானே கையெழுத்திட்டீர்கள் எனக் கூறியுள்ள அவர், பணம் கிடைக்காததற்கெல்லாம் தனது கணவரைக் குற்றம் சொல்வதை ஏற்க முடியாது என்றும், திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்...