தமிழ்நாடு

மருமகனை வெட்டிக்கொன்ற வழக்கு : மாமனாருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை ரத்து

குடித்துவிட்டு மகளுடன் தகராறு செய்த மருமகனை வெட்டி கொன்ற மாமனாருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் மாமரத்துப்பாளையத்தை சேர்ந்த தங்கவேலு என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு, தனது மகளிடம் குடித்துவிட்டு தகராறு செய்த மருமகன் பாலகிருஷ்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். தங்கவேலுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தங்கவேலு இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், , தங்கவேலுக்கு எதிரான குற்றச்சாட்டை காவல்துறையினர் நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..