தமிழ்நாடு

பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் ஆள் கடத்தல், 10 லட்சம் கேட்டு மிரட்டல் - 4 பேர் கைது

நீண்ட நாட்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் கடத்தல்

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் கரட்டுபாளையத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் வெங்கடேஷ்வரன், மகாதேவன் என்பவரிடம் 4 லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார். நீண்ட நாட்கள் கடந்தும் பெற்ற பணத்தை திருப்பி தராததால் கோபமடைந்த மகாதேவன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடேஷ்வரனை கடத்தியுள்ளனர். பின்னர் அவரது மனைவி சுந்தரியிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை தரும்படி போன் மூலம் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சுந்தரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, கோபிசெட்டிபாளையத்தில் வெங்கடேஸ்வரன் மீட்ட போலீசார் மகாதேவன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை கைது செய்து, பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்