Erode | Wild Elephant | கடை, லாரி ஒண்ணும் விடல.. | அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டு யானைகள் ஈரோட்டில் அடுத்தடுத்து யானைகள் அட்டகாசம் - பொதுமக்கள் அச்சம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் அடுத்தடுத்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது... பெரிய கள்ளிப்பட்டி அருகே சாலையோர பழக்கடைக்குள் நுழைந்த யானை, பழங்களைத் தின்றுவிட்டு கடையை முழுவதுமாக துவம்சம் செய்தது. இதேபோல், பண்ணாரி அம்மன் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்த யானை, தும்பிக்கையால் கரும்புகளைப் பறித்து சாப்பிட்டது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.